சீனாவிடம் இருந்து வலிமை வாய்ந்த J10 C ரக விமானங்களை வாங்க ஈரான் முடிவு செய்துள்ளது.
ரஷ்யாவிடம் ஏற்கனவே சுகோய் 35 ரக விமானங்களை ஈரான் கேட்டிருந்த நிலையில் அவை வந்து சேர்வதில் நீண்ட தாமதம் நீடிக்கிறது.
50 விமானங்களுக்கு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்ட நிலையில் தற்பேர்து வரை 3 விமானங்கள் மாத்திரமே வந்து சேர்ந்துள்ளன.
இந்த சூழலில் சீனாவின் J10 C விமானங்களை வாங்க ஈரான் முடிவு செய்துள்ளது.
அண்மையில் முடிந்த போரில் இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல்களை பழமையான விமானங்களை வைத்துக்கொண்டு சமாளிக்க ஈரான் படைகள் சிரமப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் உடனடியாக வலிமை வாய்ந்த விமானங்களை தங்கள் படையில் சேர்க்க ஈரான் அவசரம் காட்டுவதாகவும் இதற்காக சீனாவை அணுகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யாவின் சுகோய் 35 விமானங்கள், இரட்டை இன்ஜின் கொண்டுள்ள நிலையில் சீனாவின் J10 C விமானங்கள் ஒற்றை இன்ஜின் மாத்திரமே கொண்டவையாகும்.
இருப்பினும் அதிநவீன வசதிகளும் வலிமையும் அதிகம். மேலும் இலங்கை மதிப்பில் 1746 கோடி ரூபாய் வரை விலை குறைந்தவையாகும்.
J10 C விமானங்களில் PL15 ரக ஏவுகணைகளை பயன்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. இதே ரக விமானங்களையும் ஏவுகணைகளையும்தான் இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தானும் பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.